என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சோழவந்தான் விபத்து"
வாடிப்பட்டி அருகே உள்ள சல்லக்குளத்தை சேர்ந்தவர் குருவையா. இவரது மகன் கார்த்திக் (வயது 27). டிரைவரான இவருக்கு அடுத்த மாதம் 12-ந் தேதி திருமணம் நடைபெற இருந்தது.
இந்த நிலையில் சம்பவத்தன்று கார்த்திக் அதே கிராமத்தை சேர்ந்த நண்பர் சீனிவாசன் என்பவருடன் மதுரைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் இருவரும் ஊருக்கு புறப்பட்டனர்.
வாடிப்பட்டி அருகே உள்ள நகரி 4 வழிச்சாலையில் வந்து கொண்டு இருந்த போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.
கார்த்திக், சீனிவாசன் ஆகியோரை அப்பகுதியினர் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திக் பரிதாபமாக இறந்தார். சீனிவாசன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
திருமணமாக இருந்த புதுமாப்பிள்ளை கார்த்திக் விபத்தில் பலியானது அவரது உறவினர் மட்டுமின்றி கிராம மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சோழவந்தான்:
சோழவந்தான் அருகே உள்ள மண்ணாடிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவருடைய மகன் மாரநாடு (வயது 18). கம்பி கட்டும் கட்டிட தொழிலாளி.
இவர் தினமும் ஊரில் இருந்து மோட்டார் சைக்கிளில் மதுரைக்கு வேலைக்கு செல்வது வழக்கம். இன்று காலை 8 மணி அளவில் வீட்டில் இருந்து மாரநாடு புறப்பட்டார்.
திருவேடகம் பகுதியில் மோட்டார் சைக்கிள் வந்தபோது, எதிரே மணல் லாரி வந்தது. எதிர்பாராத விதமாக அந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மாரநாடு தூக்கி வீசப்பட்டார். பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர். அதற்குள் மாரநாடு பரிதாபமாக இறந்தார்.
விபத்து குறித்து சோழவந்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான மாரநாடு பெற்றோருக்கு ஒரே மகன் என்பதால் மண்ணாடிமங்கலம் கிராமம் சோகத்தில் மூழ்கி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்